முகப்பு
கவிதைமணி

பொம்மைகள்: வே.சிவசெல்வன்

Updated On : 10 அக்டோபர், 2016 at 3:18 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
சாவி கொடுத்தால் ஓடும்ஒற்றைக் கொம்பு மாடு!நான்காவது சக்கரம் இல்லாதபேட்டரி கார்!டோரா படம் வரைந்தகாற்றில்லாத பலூன்!சொன்னதெல்லாம் கேட்கும்தலையாட்டி பொம்மை!பூனை போல கத்தும்புல் தின்னாப் புலி!தாகம் தீர்க்கும்தண்ணீரத் துப்பாக்கி!என்று வகையானபொம்மைகள் பலவிதம்!ஒவ்வொன்றும் ஒரு ரகம்!பொம்மைகள்குழந்தைகளின்இன்ப உலகைத்திறக்கத் தெரிந்த சாவிகள்!குழந்தைகள்பொம்மைகளின்மௌனத்தை மொழியாக்கும்ஜீவன்கள்!பொம்மைகளும்குழந்தைகளும்மனம் விட்டுப் பேசிக் கொள்ளஎத்தனையோ இருக்கின்றன!குழந்தைகள் உடன்விளையாடும்ஒவ்வொரு முறையும்பொம்மைகள் உயிர்த்தெழுகின்றன!பின்னாட்களில்....பொம்மைகளின் உலகிலிருந்துகுழந்தைகள் மெல்ல மெல்லஉண்மைகளின் உலகிற்குஇடம் பெயர்ந்தாலும்பொம்மைகள் மட்டும்எனறென்றும் உயிர்த்திருக்கிறது...குழந்தைகளின் நினைவுடனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.