முகப்பு
கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்:  ரீகன் •ஜெயக்குமார்

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 1:10 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM

உறுதியான
மனம்
படைத்தவனே
உன்னதமான 
எதிர்காலத்தை 
அமைத்து கொள்கிறான்

உலகில்
உயர்ந்ததாக
கருதப்படுவது மனிதன்
மனிதனிடம் உயர்ந்ததாக
கருதப்படுவது மனம்

கோடிகளில் இல்லாதது
தெருக்கோடிகளில் வாழ்கிறது மனம்

Advertisement

மனிதன் போகும் இடமெல்லாம்
அவன் மனம் போவதில்லை...

மனம் அற்றுப்போகையில்
அமானுஷ்யங்களை நாடும்
இற்றுப்போன மனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.