மனம் என்னும் மாயப் பேய்: பொன் . குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
மனம் என்னும் மாயப் பேய்
மனிதனைப் பிடித்து ஆட்டுகிறது.
மனம் மனிதனிடம் இருந்தாலும்
மனத்திடமே மனிதன் சிக்கியுள்ளான்.
மனத்திற்கு உருவம் இல்லை.
மனத்திடமிருந்து விடுதலை இல்லை.
மனம் என்பது ஒரு குரங்கு
மனதின் வழி செல்பவருக்கு இல்லை ஒழுங்கு.
மனதைக் கட்டுப் படுத்தும் மனிதனே
முன்னேற்றம் கண்டிட முடியும்.
மனப் பேயை மனிதன் விரட்டிட்டாலே
மனித வாழ்வும் இருளிலிருந்து விடியும்.