கவிதைமணி

மனமெனும் மாயப் பேய்:  கவிஞர் இளவல் " ஹரிஹரன்

கவிதைமணி
மந்திரக்கோ லொன்றுவேண்டும் நம்மை யாட்டும்        மனமென்னும் மாயப்பேய் தனைய டக்கதந்திரந்தான் செய்தாலும் அடங்கா அந்த       சாகசத்தை அறிவதுதான் முடிவ தில்லை,விந்தையிது என்செயினும் விளங்க வொண்ணா       வேடிக்கை உள்ளிருந்தே வேலை காட்டும்.முந்தையரும் முனிவோரும் முயன்று பார்த்தும்       முடியாமற் போனகதை தெரிந்த தன்றோ.ஐம்புலன்கள் அதன்கருவி ஆசை காட்டி       அதன்வழியே ஆட்டுவிக்கும் சாக சங்கள்,பொய்மையினை மெய்யாகக் கண்முன் காட்டி        புதைகுழியிற் சிக்கவைக்கும் புரிந்து கொள்ளமெய்மதியை மயக்கத்தில் மூழ்க வைத்து       விழிமூடும் நாள்வரையிற் கூட வந்துகைவரிசை காட்டிநிற்கும் கள்ளப் பேய்தான்       கணக்கில்லா நாடகங்கள் காட்டி நிற்கும்.மனமடக்க வேண்டுமெனிற் மௌனங் கொண்டு      மனமில்லா வெளியினிலே சிந்தை கொண்டுமனமொன்றி, அலைபாயும் அறிவின் போக்கை      மனம்நீக்கிக் காண்கின்ற கண்கள் கொண்டுமனதுக்குள் மனதாக   மனதிற் தோன்றும்      மந்திரத்தை உருப்போட மீண்டும் மீண்டும்மனம்தோன்றி மனமடங்கும் சித்தத் திற்குள்     மனமென்னும் பேயோட மனமொ டுங்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT