கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்: ஆர்.அருண்குமார்

கவிதைமணி

மௌனச் சிறகுகளாய் மாயமாகும்
மனசென்னும் அலைகடல்.
மேவியே நெஞ்சையள்ளி மென்னி
முறித்திடும் காதல் பிசாசாய்.

கணப்பொழுதில் கலைந்திடும்
காத தூரமே ஓடிடும் மேகமாய்.
தினமும் வாஞ்சையாய் நெஞ்சில்
தீயை மூட்டியே தெறிக்கவிடும்.

கிளை விட்டு கிளை செல்லும் மந்தியாய்
கீழான எண்ணத்தில் தாவிடும்.
முளைவிட்டு வளர்த்திட்ட முள்ளாய்
மூச்சை மெல்லவே அடக்கிடும்.

அசையாத சிறகாகி அலையாமல்
ஆழ்கடல் நீர்போல உறங்கிடும்.
திசையில்லா தீந்தென்றலாய்
திகைத்து நின்று ஒலமிடும்.
 
குதிரைக்கு கடிவாளம் போட்டால்
குந்தகம் கிடையாது இனிமேல்.
புதிரான மனதுக்கு எந்நாளும்
பொறுமையே வேண்டும் நமக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT