கவிதைமணி

மனம் என்னும் மாயப் பேய்: கே.நடராஜன்

கவிதைமணி
மனம் ஒரு குரங்குதான் ...இல்லை என்று சொல்லவில்லை  நான் !இங்கும்  அங்கும் அலையும் மனக் குரங்கை அடக்கி வைக்கும் ஒரு குரங்காட்டியாக  நீ இருக்கலாம்... தவறில்லை !மனக் குரங்கு தறி கெட்டு நெறி தவறி அடங்கா குரங்காட்டம் போடும் நேரம் உன் மனமே ஒரு பேயாக மாறும் ,உன்னை தன் மாய வலையில்  சிக்கவைத்து ..! உன்னையும்  மாற்றும் அந்த மாயப் பேய்  தன் கூட்டத்தின்  ஒரு அங்கமாக !சிக்கவும்   வேண்டாம் அந்த  மாய வலையில் ...மாயாவியாக நீ மாறவும் வேண்டாம் !...  ஒரு நல்ல குரங்காட்டியாக மட்டும் நீ இருந்தால்!   உன் மனக் குரங்கும்  ஒரு குரங்காக மட்டுமே அலையும்  என்றைக்கும்...  நீ போடும் "கோட்டை"  தாண்டாமல் !நல்லன ஏற்று  அல்லன ஒதுக்கி உன் மன சிற்பம்  நீ செதுக்கினால்  அல்லல் என்றும் இல்லை உனக்கு  தம்பி ! உன் மனம் என்றும் நல்ல மனமாக மணக்கும் ...உன் வாழ்வும் இனிக்கும் ! இந்த ஊரும்  நாடும் உன்னைப்  போற்றி  வணங்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT