ஜன்னல் நிலா: சு.ஜெயக்குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
என்ன தைரியம் இது
என் வீட்டு ஜன்னலுக்குள்
ஒளி பாய்ச்சி
என் தனிமையை
எட்டிப் பார்ப்பது
யாரது என
ஏறெடுத்து பார்த்தபோது
என் கண்ணில் பட்டதோ
ஒளிர் நிலா
என்ன ஓர் அழகு
என மயங்கிய எனக்கு
ஒரு ரம்மிய உலகை
கண்ணில் காட்டி
இருளைக் கண்டு
இடிந்து போகாதே
விரிந்து கிடக்கும்
உலகை ரசிக்க
வெளியே வா என
கட்டளையிட்டது!