கவிதைமணி

ஜன்னல் நிலவு:  கவிஞர்  " இளவல் "  ஹரிஹரன்

கவிதைமணி
காதோரம் நரைத்தமுடி வெளிச்சங் காட்டும்
        கண்களின்கீழ் கருவளையம் மேகங் கூட்டும்
தேதிசெல தேதிசெல முதுமை கூடும்
        திசைபார்த்துத் திக்கின்றி அலையும் உள்ளம்
பாதையெலாம் முட்களெனப் பூக்கள் தீட்டும்
        பார்வையிலே முதிர்ந்துவிட்ட கனியைப் போல
ஆதரவாய் முதிர்கன்னிக் கமைந்து விட்ட
        அற்புதந்தான் வீட்டிலுள்ள ஐன்ன லாகும்.
ஜன்னல்வழி தோன்றுகின்ற நிலாவாய்க் காணச்
        சங்கடங்கள் தோன்றுதய்யோ கால வெள்ளப்
பின்னலிலே கரைகின்ற இளமை போகும்
        பேச்சளவில் திருமணத்தின் சுவையும் தீரும்
திண்ணையிலே அமர்ந்தபடி காணும் காட்சி
         தெருநோக்கும் ஜன்னலிலே விரியும் மெள்ள.
முன்னம்கண் கண்டகனா முடிவை நோக்கி
         முன்னேறக் காட்சிகளில் திருப்தி கொள்ளும்.
கைகோர்த்து நடந்துசெல்லும் புதுமண மக்கள்
         கண்பார்த்துக் காதலித்துப் பழகிடும் மக்கள்
மைவிழியால் பேசியபடி மயக்கிடும் மக்கள்
         வாரிசுகளாய் பெற்றெடுத்த குழந்தை மக்கள்
பையநடம் புரிந்தபடி பார்க்கும் போது
         போதாத தட்சணையால் வீட்டில் முடங்கி
கையறுநிலையாகவே வாழ்க்கை ஜன்னல்
         கம்பிகளைத் தேய்த்தபடி தேயும் திங்கள்.                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT