கவிதைமணி

ஜன்னல் நிலா: பாவலர்  கருமலைத்தமிழாழன்

கவிதைமணி

குழந்தையினை   இடுப்பினிலே   தூக்கி   வைத்துக்
    குளிர்ந்தகாற்று   வீசும்மாந்   தோப்பில்   நின்று
அழகான   நிலவுதனை    அன்று   காட்டி
    அன்னையவள்   ஊட்டிவிட்டாள்   அமுதை   அன்பால் !
புழக்கடையும்    முற்றமெல்லாம்   மாறிப்   போகப்
    பூஞ்செடிகள்    தோட்டமெல்லாம்   வீடாய்   மாற
நிழல்சூழ்ந்த    கட்டடங்கள்    தொகுப்பிற்   குள்ளே
    நிலவெட்டிப்   பார்க்கயின்றோ    வழியே   இல்லை !

சன்னலிலே   தெரிந்தநிலா   மரம்கீழ்   பாட்டி
    சாய்ந்துவடை   சுடுகின்றாள்   என்று   சொன்ன
முன்னோர்கள்    கதைமாய ;    மல்லை   கைப்பூ
    முன்னெடுத்து    மலையேறி    வாவா  என்ற
கன்னற்சுவைப்    பாடல்கள்    முரணாய்ப்   போகக்
    கற்பனையில்   அழகிற்கும்    தண்ணெ   ளிக்கும்
கன்னிமுக    உவமையாக்கிச்   சொல்லி    வந்த
    கவிதையெல்லாம்   பொய்யாகிப்   போன   தின்று !

அறிவியலில்   முன்னேறி    சன்னல்   தன்னில்
    அழகென்றே   கண்டுவந்த    நிலவுக்   கோளில்
பொறித்திட்டார்    கால்சுவட்டை !   மண்ணெ   டுத்துப்
    பொதிந்துள்ள    உண்மைகளை    ஆய்வு   செய்தார் !
அறிவாலே    அங்குவாழத்   திட்டம்   தீட்டி
    அகற்கின்று    முன்பதிவும்   செய்ய   லானார்
வெறியூட்டும்   மதச்சாதி    எல்லாம்   விட்டு
    வேர்போல   மனிதநேயம்    வளர்ப்போம்   அங்கே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT