கவிதைமணி

ஜன்னல் நிலா: மீனா தேவராஜன்

கவிதைமணி
நகர்புறம் வாழும் நான் நாகரீகத்தின் உச்சிலென்று
அடைப்பு வீட்டில் அடைந்து கிடக்கிறேன் நான்
ஜன்னல் வழி வான்பரவைப்படகு நிலவைக் கண்டேன்
எப்போதும் நீ அழகுபாரில்நீ உலா செல்ல
என் இளமைக்காலம்மனத்தில் ஊஞ்சலாட
இப்போது நான் அப்போதுபோல் இல்லை 
வெட்டவெளியில் வட்ட நிலாவைக் காணவில்லை
பட்டொளி மரநிழலில் கண்ணாமூச்சி ஆடவில்லை
வீட்டுமுற்றத்தில் உன் அழகில் நான் மயங்கவில்லை
வெள்ளித்தட்டாய் விண்ணில் உன் வலம் கண்டதில்லை
நிலத்தில் நான் இரவில் நடக்குங்கால் வெண்ணிலா
நீள்வானில்   இன்று என்னுடன்  வருகிறதாஎன்று
அண்ணாந்து பார்த்துத் தரையில் வரவில்லை உலா
விண்ணில் உள்ள உன்னை நேரே காண இயலா
விண்ணைத் தொடும் வியன் மதில் புறாக்கூடு
கண்ணுக்கெட்டா உயரத்தில் உள்ளது என்வீடு
முற்றமில்லா மூச்சுமுட்டும் வீட்டில் மாளாப்
பற்றால் பரவெளியில் பார்ப்பதுஜன்னல் நிலா
இற்றை ஜன்னல் நிலாவென்றாலும் நீ வெண்ணிலாவே
அற்றை முற்றத்து நிலாவென்றாலும் நீ விண்ணிலாவே
அன்றும் கண்டதும் அதே நிலா, இன்றும் காண்பதும் அதே நிலா
என்றும் மங்காது உன் அழகே! என்றும் குறையாது உன் ஈர்ப்பே!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT