முகப்பு
கவிதைமணி

நெல்லுக் கிறைத்தநீர்: அ.வேளாங்கண்ணி

Updated On : 5 செப்டம்பர், 2016 at 5:55 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

நெல்லுக்கிறைத்த நீர்
வீணாகப் போகாது
வாய்க்காலில் பாயும்போது
மண்ணைப் பதப்படுத்தும்

சிறுசிறு உயிர்களின்
தாகத்தை தீர்த்துவைக்கும்
நெல்லை விளைவித்து
விவசாயியை மகிழ்விக்கும்
வழியைக் காட்டிவிட்டால்
வேறுவழி செல்லாது

துளியும் சேதமின்றி
நன்மைமட்டும் செய்துவிடும்
அடிக்கும் வெயிலையும்
அமைதிப் படுத்திவிடும்
துடிக்கும் பயிர்களின்
மூச்சுக்காற்றாய் மாறிவிடும்

Advertisement

இந்நீரின் சலசலப்பு
சங்கீதம் போலாகும்
மண்வெட்டி மறுக்கும்வரை
தன்வழியே போயிருக்கும்
சேற்றுக்குள் ளிறங்கி
சேதாரம் ஆகாமல்
நாற்றை விளைவித்து
சோறாகி பசியாற்றும்
நீர்பாய்ந்த நிலமெல்லாம்
இன்றெங்கே போனதுவோ
செழிப்பான வயற்காடு
செறிவிழந்து ஆனதுவே
விவசாயம் மறக்கப்பட்டு
வேறுதொழில் பிறக்குதுவே
விவசாயி வாழாவிட்டால்
உலகம் வீழ்ந்துவிடும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.