கவிதைமணி

நெல்லுக்கிறைத்த நீர்; ஆப்ரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி

முள்ளுக் கிறைத்தநீர்
முளைக்கக் கூடாத இடத்தில்
முளைத்து மனுக்களை ;
படுத்தக்கூடாத பாடு படுத்தும்
பயணிக்கும் பாதைகளில்
பாதத்திற்கு பாதகமிழைத்து!

கொள்ளுக் கிறைத்தநீர்
வித்தை விளைவித்து சக்தி
தனை பெருக்கும் புறவிக்கு;
அப்பிறவிக்கு பிறப்பாகி
தன்னையே தாரை வார்த்து
அதிலொரு சுகம் காணும்

எள்ளுக் கிறைத்தநீர்
நல்லெண்ணைக்கு உபறி
யாகி வருமானம் பெருகிட;
வித்தினைப் பெருக்கியே
நெத்தினை தந்து சொத்து
சுகம் கண்டு களித்திடும்!

கல்லுக் கிறைத்தநீர் 
மண் குளிர்ந்து மகிழ்ந்திடும் 
கருமியாய் பலர் தெரிவார்;
தணல் தாங்கா துருகிடும் வெண்ணெய் போல் சிலர் உயிரையும் கொடுத்திடுவர்!

நெல்லுக் கிறைத்தநீர்
களையாய் முளைக்கும்
புல்லும் தாகப்பசித்தீரும்;
உள்ளோர்க்கு சேரும் தனம்
இல்லார்க்கு பயன் இல்லை
கள்ளவராகி பதுக்குவதால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT