முகப்பு
கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்: லூர்து எஸ் ராஜ்

Updated On : 19 செப்டம்பர், 2016 at 4:06 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM

நதிகளில் பாயும் தண்ணீரால்
நாடு செழிக்கும் ; நம் மக்கள் வாழ்வார்.
நாளத்தில் செல்லும் செந்நீரால் உடல்
நலம் பெருக்கி  வாழ்வார் நம் மக்கள்.

மாசனைத்தும் சிறு நீரக நுண்   
வலையால் தனிப்பட்டு வெளியேறும்.
தூயதான குருதி ஓடி எல்லா
துணை உறுப்புக்கும்  உணவூட்டும்.

நதிநீர் ஓடும் வாய்கால் கரையில்
நம் உழவர் வயலைப் பயிரிட்டு
உணவைப் பெருக்கி ஊட்டிடுவர்
உறுபசி பஞ்சம் போக்கிடுவர்.

Advertisement

தண்ணீரை நாம்  தடுப்பதனால்
தரணியெங்கும் வறட்சியாகும்
செந்நீரை நிணம்  தடுப்பதனால்
தேகமெங்கும் நோயாகும்.

இரத்த தானம் செய்திடுவோம் எளியோர்
இன்னுயிர்களைக் காத்திடுவோம்;
தண்ணீரை தேவையில்   விடுவித்து
சமாதான சகவாழ்வை போற்றிடுவோம்.
இந்தியா ஓர் நாடாகும் ; நாமெல்லாம்
இந்தியத்தாய் பெற்ற மக்களவோம்  
என்றுறுதி கொண்டே   வாழ்ந்திடுவோம்
அன்றி முற்றும்  முழுதாய் வீழ்ந்திடுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.