நீதியைத் தேடி: மாரி.சுப்பிரமணியன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்
யாவருக்கும் பொதுவானதே…
யாவருமே சாதுவாகயிருக்கும் போது,
எங்குமே சமாதானமே சந்தோஷமே
எவ்விடத்திலும், இல்லாத போது தான் , அது,
பொல்லாத பொழுதாகிறது..
எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாகக்
கிடைத்திட ,,
அநீதியை உடைத்திட, சமதர்மபூமியை படைத்திட,
நீதியைத்தேடி அலைகின்றேன்,
மனதால் நிலை குலைகின்றேன்.
அன்று, கண்ணகி தேடிய நீதியை ------- இன்று,
நானும் தேடித்தேடிச் செல்கின்றேன்..
ஒன்று, அதுவும் இன்று நின்று சொல்கின்றேன்,
நீதியாகவே நாமிருப்போம்
நாம் தேடுகின்றநீதி நம்மிடமே என்றும்
இருக்கும்