நீதியைத் தேடி: ரா.பார்த்தசாரதி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
குற்றங்கடிதல் எழுதிய வள்ளுவன் நீதியை தேடி எழுதவில்லை அன்று !ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கொரு நீதியா !ஏன் என்று கேட்க தெரியவில்லையா ?சட்டத்தின் முன் எல்லோரும் சமம்நீதியை பாகுபடுத்தி பார்ப்பது எங்ஙனம் ?நடுநிலைமையுடன் நீதி வழங்க வேண்டும்நீயத்திற்கும், மனசாட்சியுடனும் நடக்க வேண்டும் ,இன்று நீதிக்கே அநீதி இழைக்கப்படுகிறதே !பணத்தினால் உண்மையும், சாட்சியும் மறைக்கப்படுகிறதே ணமிருந்தால் நீதியைக்கூட அடிமைபடுத்தமுடியும்செய்யாத தவறுக்கு ஏழையை கூட சிறைபடுத்த முடியும் !அவனியில் ஏழைக்கு ஓர் நீதியாபணம் படைத்தவனுக்கு ஓர் நீதியா !நீதி பணத்தால் தன்மானம் இழக்கின்றதுஏழைக்கு எட்டா கனியாகிறது !நீதியை உண்மையாக்கினான் மனுநீதி சோழன்உண்மையை விலை பேசினான் இன்றைய நீதியரசன் !நீதி பணத்தால் இன்றும் மௌனம் சாதிக்கின்றது ,நீதியை தேடி நிலைநிறுத்த நீதிபதியா ! மனுநீதிச்சோழனா!