முகப்பு
கவிதைமணி

நீதியைத் தேடி... : தகடூர் செவ்வியன்

Updated On : 23 செப்டம்பர், 2016 at 3:30 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM

நீதியைத் தேடி எங்கே செல்வது
திருதுராட்டிரனுக்கு கண் தரியவில்லை
என்பதற்காக தன் கண்ணையும்
மூடிக்கொண்டாள் உத்தமி காந்தாரி...

இங்கும் ஒருத்தி வௌ்ளைப்புடவை
கட்டிக் கொண்டு இடது கையில்
தராசையும் ஏந்திக் கொண்டு
கருப்புத் துணியால் கண்ணையும்
மூடிக்கொண்டு நின்றிருந்தாள்...

அவளும்!
இன்று அவிழ்க்கப்பட்ட சேலையோடு
தராசையும் தொலைத்துவிட்டு
கைகூப்பி நிற்கின்றாள் நீதி வேண்டி...

Advertisement

யாரும் வாயைத் திறக்கவில்லை
பல கிருட்டிணர்களும் கூட
கையை மூடிக்கொண்டு நிற்கின்றனர்...

நீதியரசரின் இருக்கைக்கு மேலே
பொக்கை வாயை பிளந்து கொண்டு
“வாய்மையே வெல்லும்”
என்று பொறுமையாய் தொங்கிக்
கொண்டிருந்தார் ஒருவர்...

அவரும் கைத்தடியை இழந்துவிட்டு
தள்ளாடி தள்ளாடி நிற்கின்றார்
சுதந்திரம் பெற்றுத்தந்த குற்றத்திற்காக
குற்றவாளிக் கூண்டில்...

வாதாட வந்த வக்கீல்களும்
வருமான மயக்கத்தில் வாயை மூடி
வாதாடுகின்றனர்...

தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்
நீதியை நம் உள்ளத்திலும் இல்லத்திலும்
வன்முறைக் குற்றங்களை மூடி
மறைத்துக் கொண்டு...

இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்
கிடைக்கப்பெறாத அரும்பெறும் நீதியை...

(உகும்... போலிப் புன்னகையோடு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.