நீதியைத் தேடி: கே.நடராஜன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
அன்றைய அரசன் சொன்னது நீதி ..செய்தது நீதி !.
அவன் நடந்து காட்டிய வழியும் நீதி வழியே !
அரசனும் அவனே ...நீதிமானும் அவனே !
நீதி தேடி அவன் மக்கள் வேறு எங்கும் சென்றது இல்லை
மன்னன் அவன் தீர்ப்புக்கு மறு கேள்வி இல்லை !
இன்று அரசே நீதி தேடி ,ஓடி , அலையும் அவலம்
ஒரு நதி நீருக்காக !
ஒரு அரசுக்கே கதி இது என்றால்
எனக்கும் உனக்கும்
விடிவு காலம் எப்போது ?
தேசிய நதி நீர் பங்கீட்டு விதி என்று ஒன்று உதித்து
அதை அரசும் மக்களும் மதிக்கும் அந்த நாள் எந்த நாள் ?