கவிதைமணி

நீதியைத்தேடி : அருள் .க.  இராபர்ட் 

கவிதைமணி

தேரா மன்னனை தேறிட வைத்து 
தெளிந்தது ஓர் காலம் 
போராடாமல் நடுமணி அடித்து
பெற்றது ஓர் காலம்

புறாவுக்காக தொடைக்கறி கொடுத்து 
பூரித்ததோர் காலம்  
கரவாது நிறைவாய் மக்களிடையே 
கனிந்தது ஓர் காலம் 

காசும் பணமும் கையில் இருப்போர் 
களித்திடும் இக்காலம் 
பேசும்பரிசும் பதவியும் நிதியும் 
பேரமும் இக்காலம்
நீசர் கைகளில் ஆட்சி இருப்பதால் 

நீதியைக் காணவில்லை 
தேசத்தின் வீதியில் நீதியைத் தேடி 

திகைக்கிறோம் இக்காலம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT