கவிதைமணி

 கைகோர்ப்போம்:  ரீகன். ஜெயக்குமார்

கவிதைமணி

விடியல்களின் வெளிச்சம் தேடி 
விரைந்து செல்கிறோம்... ஒரு பயணம்!

நம்பிக்கையின் ஒளிபற்றி, 
முன்னேறிக் கொண்டிருக்கிறோம்,
எம் வாழ்வின் விடியல் நோக்கி...

புத்தகம் சுமக்கும் கைகளில் 
ஆயுதமேந்தி 
புன்னகை சுமந்த எங்கள் முகமோ
புரட்சியின் ஆயுள் ரேகை சுமந்து...

மனிதர்களை வதைத்த மனங்களில் 
மனிதம் விதைக்க விரைகிறோம்...

இனி வரும் எம் மக்கள் 
முகங்களில் புன்னகை மலரவேண்டும்...

கண்ணிவெடிகளின் சப்தம் கேட்ட எம் மக்கள், 
இனி வான வேடிக்கை காணவேண்டும்...

அகதிகளாய் அந்நிய தேசம் செல்லாமல், 
எம் மண்ணின் மூச்சு காற்றை சுவாசிப்போம்...

கைகோர்ப்போம் விடியல்களின் 
ஒரு வெளிச்சப் பயணம் தேடி !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT