கவிதைமணி

சூரிய தாகம்: அதியணன் நரசிங்கம் பாளையம்

கவிதைமணி

குட்டை நீரை குடித்திருந்தும் 
கோர தாகம் தீரவில்லை!
குளத்தின் நீரை குடித்திருந்தும் 
கொஞ்சம் கூட போதவில்லை! 

ஏரி நீரை குடித்திருந்தும் 
எடுத்த தாகம் நீங்கவில்லை !
வாய்க்கால் நீரை குடித்திருந்தும் 
வறண்ட நாவில் ஈரமில்லை !

ஆற்று நீரை குடித்திருந்தும் 
ஆறா  தாகம் சோரவில்லை! 
ஊற்று நீரை குடித்திருந்தும் 
உறுத்தும் தாகம் மாறவில்லை! 

பலர் கண்ணீர் கொடுத்தே பதறுகின்றார்-என்
பாழும் தாகம் இனி தீர்ந்திடாதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT