கவிதைமணி

சூரிய தாகம்: கே.நடராஜன்

கவிதைமணி

சுள்ளென்று எரிக்கும் சூரியனின் தாக்கம் தெரியும் 
அது என்ன சூரிய தாகம் ? சூரியனுக்கே  தாகமா !

இல்லை  தாகம்,  சூரிய வெப்பம் தாக்கும் பூமிக்கா ?
தாகம் பூமிக்கு மட்டும் அல்ல ...  சூரியனுக்கும் இருக்கு !

மண்ணில் உள்ள நீர் மனிதனுக்கு மட்டுமல்ல சொந்தம் !
விண்ணில் உள்ள மேகத்துக்கும் அதுதானே நீராகாரம் !

மண்ணிலிருந்து நீர் உறிஞ்சி வெண் மேகம் நெய்து 
கொடுக்கும் கரு மழை மேக புத்தாடை  சூரியனுக்கு 

ஒரு பட்டாடை ! கதிரவன் அவன் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தலும் அதுவே ! 

விண்ணின் தண்ணீர் பந்தல் அள்ளி வழங்கும் 
கொடையே இந்த மண்ணுக்கு துள்ளி வரும் மழை !

மண்ணுக்கு துள்ளி வரும் மழை நீரை வரவேற்க 
ஏரி குளம் ஒன்றும் இல்லையே நம் மண்ணில் இன்று !

மண்ணுக்கு குடை பிடித்து கருமேக மழைப் 
பொழிவை வழி காட்டி வரவேற்கும் மரம்,

கானகமும் கண்ணில் படவில்லையே இன்று !
வரிசை கட்டி வானம் தொடும் கட்டிடங்கள்தான் 

தெரியுது கண்ணுக்கு எட்டும் தூரம் மட்டும் !
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ! ஏரி குளம் 
அருமை புரிந்து நம்  மண்ணின் நீர் வளம் 
காப்போம் !

மரம் வளர்த்து நீர் வளம் பெருக்கினால் 
தீரும் அந்த சூரிய தாகம் ! 
சூரிய தாகம் தணிந்தால்  தீரும் இந்த மண்ணின் 
தண்ணீர் தாகம்  தன்னால் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT