கவிதைமணி

சூரிய தாகம்: பூ.சுப்ரமணியன்

கவிதைமணி

ஏரி குளம் கிணற்றுநீர்
வாரிக் குடித்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

ஏழையின் நரம்புபோல்
ஈரம் காணாத நிலம்
வெடிப்பு கண்ட பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

கங்கைநீர் சுமந்து செல்லும்
மங்கையர் குடம் கூட
தண்ணீரின்றி ஆடுவதை
கண்ணால் கண்டபின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

தண்ணீர் தாகம் தணிக்க  
காட்டில் சுற்றித் திரியும்
யானைகள் மான்கள்
வீட்டினைச் சுற்றி சுற்றி
சட்டி பானை உருட்டுவதை
எட்டிப் பார்த்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

சூரியனே உன் தாகம்
தணிக்க குறைய
விண்ணிலே காட்டு
மண்ணிலே காட்டாதே !

விண்ணிலே
கருமேகங்களை கூட்டி
உயிர்கள் தாகம் தணிக்க
ஏரி குளம் நீரால் நிரப்பு !!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT