கவிதைமணி

சூரிய தாகம்: வேம்பார் மு.க.இப்ராஹிம்

கவிதைமணி

சுட்டெரிக்கும் வெயில்..!
வீட்டுக்கு ஒரு மரம்
நட்டு வைக்க நாதியில்லை..
வீதிக்கு ஒரு மரம்
விதி என ஆனது..!

குடிக்க தண்ணீர் கேட்டு
குடத்தோட 
சாலையில போராட்டம்..
கேட்பார் யாருமில்லை..
தாகம் தீர்ப்பாரும் யாருமில்லை..!

வற்றிப் போன ஆறு குளம்
கானல் நீராய் கண்ணுக்கு ..!
வந்த மழை நீரும்
வீணாய் போகுது கடலுக்கு..!

சூரியனுக்கு பொங்கலிட்டு
நன்றி சொல்ல வழியில்லை..!
சூரியனே தாகத்துலே
தவிக்கிறப்ப என்ன செய்ய..?

மழை நீரை சேமிக்க
மனசு இல்லை நமக்கு..!
சூரிய தாகத்துக்கு
தீர்வு தான் யாரு சொல்ல..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT