பூமி தலை குளிக்க
புற்கள் தலை தூக்க
பறவைகள் தாகம் தணிக்க
தண்ணீர் லாரிக்கு ஓய்வு கொடுக்க
தண்ணீர் குழாய்க்கு வேலை கொடுக்க
உழவன் பொன் ஏறு பூட்ட
கவிஞன் கவிதை படைக்க
குழந்தைகள் துள்ளி குதிக்க
கோடை மழையே வருவாயா?
கோடை விடுமுறைக்கு
ஊருக்கு வரும் பேரப்பிள்ளைகளை நோக்கி
காத்திருக்கும் தாத்தா பாட்டி போல
கோடை மழைக்காக காத்திருக்கிறார்கள்
மக்கள்!
அடைமழை வந்தால்
தண்ணிக்குள் ஊர் இருக்கும்!
கோடை மழை வந்தால் தான்
ஊருக்குள் தண்ணீர் இருக்கும்!
மழைக் காலத்தில் அடைமழை வந்தால்
பள்ளிக்கு விடுமுறை விடுகிறது அரசு!
கோடை காலத்தில் கோடை மழை வராததால்
பள்ளிக்கு விடுமுறை விடுகிறது அரசு!
வானமே!
நீ ! ஒளி ஒலி அமைத்து
வழி அனுப்பி வை
கோடை மழையை!
வானத்தில் கோடை மழை
கண் திறந்தால்தான்!
பூமியில் புல்பூண்டும்
கண்திறக்கும்!
வராத விருந்தாளி வந்தால்
எங்களுக்கு மகிழ்ச்சி!
கோடை மழையே! நீ!
வராது போனால்
எங்களுக்கு அதிர்ச்சி!
கோடை மழையே!
கோடையில் உன்னை வரவேற்கவே
எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை!
நீயும் விடுமுறை எடுத்து ஏமாற்றி விடாதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.