கவிதைமணி

கோடை மழை:  ஆனந்த் சுப்ரமணியம்

கவிதைமணி

மழை என்றாலே
ஆனந்தம்
கோடை மழை என்றால்
பேரானந்தம்

வருண பகவான்
பூமித் தாய்க்கு தரும்
அன்புப் பரிசு
கோடை மழை

வெப்பத்தின் சூழ்நிலையை
தலைகீழாய் மாற்றும்
தன்மை கொண்டது
கோடை மழை

சூரியனுக்கும்,
வருணனுக்கும்
இடையே நடக்கும்
ஒப்பந்தத்தில் தான்

அனைத்து ஜீவராசிகளும்
தத்தம் வாழ்வாதாரத்தை
ஆரோக்கியமாக
அனுபவிக்கின்றன

கோடை மழை
சிறுவர்களின் மகிழ்ச்சி

அடுப்படியில் வேகும்
பெண்ணினத்திற்கு
வரப்பிரசாதம்

வேர்வை சரீரம் கொண்ட
மானிடர்களின் உள்ளத்தை
குளிரவைக்கும் அற்புத மருந்து

அந்த மழையில் நனைவதே
தனி சுகம்

கோடை மழை நின்றவுடன்
நிலவும் சூழலை கொஞ்சம்
பார்ப்போம்

இதமான வானம்
பதமான பூமி
பறவைகளின் கூக்குரல்
சில்லென்ற குளிர் காற்று

மனித மனம் அனுபவிக்கும்
குதுகூலம்
ரம்மியமான சுற்றுப்புறம்
அம்மா தரும் சூடான தேனீர்

கூடவே கிடைக்கும் நொறுங்குத் தீனி
ஆண்டவா.....
வெப்பத்தை சிலகாலம் தா
கோடை மழையை நீண்ட காலம் தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT