கவிதைமணி

கோடை மழை: கமலா பார்த்தசாரதி

கவிதைமணி

வா வாவென
வயல் வெளிகள்
பல்லாயிரம் கைகளால்
வரவேற்று அரவணைக்க 

தா தா எமக்கு
உயிர் நீர் என 
எமதருமை விவசாயிகள்
வானம் பார்த்து நிற்க

வருக வருக வென்று
அனைத்து நீர் நிலைகளும்
வழி மேல் விழிவைத்து
உன் வரவை எதிர்பார்த்திருக்க
உழவருக்கு வரமாய்
மற்றவர்க்கு அருட்கொடையாய்
வறண்ட பூமிக்கு அமுதமாய்
வாராய் நீ கோடை மழையே

மழழையின் இனிமை போல் 
இசையின் இதம் போல் 
இறையின் கருணை போல்
அமுததாரையாய் இறங்கி வாராய்
கோடை மழையே..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT