கவிதைமணி

கோடை மழை: முத்துலெட்சுமி .ஜெ

கவிதைமணி

திசைகளற்ற திரைகடலின்
திசைமானியற்ற
பயணத்தின்
தென்றல் நீ

வறண்ட காற்றில்
உலர்ந்த நாவிற்கு
தூவும் கோடை
மழை நீ

பாதை இதுவென
இலக்கற்ற பயணத்தின்
வழித் துணையாய்
வந்த வரம் நீ

வீசும் காற்றிலே
வாசமாய் கலந்திருக்கிறாய்
நிறைந்திருக்கும் நீரிலும்
நீயே இருக்கிறாய்

ஆளரவமற்ற
தனிமையில்
நான் பேசிக் கொண்டிருப்பதெல்லாம்
கேட்டுக் கொண்டிருப்பதாய்

உணரவைக்கும் நீ

என்னுள் இருந்து
என் தனிமைகளுக்கு
இனிமைகள் சேர்க்கும்
கனவான நீ

அழகிய வரம் நீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT