கவிதைமணி

எனை நனைத்த மழை: - கோ. மன்றவாணன்

கவிதைமணி

தூவும் மழையில்
கருங்குடை பிடித்து நடைபின்னிய
கன்னியிடம் மழை கேட்டது :
“எனக்கேன்
கறுப்புக்கொடி காட்டுகிறாய்?”

மழையுடை தரித்து
வாகனத்தில் சீறிய
காளையிடம் மழை கேட்டது :
கவச உடை நீங்கள் அணிவதற்கு
நானென்ன
கத்திவீச்சா செய்கிறேன்?”

நனைய மறுத்துக்
கடை ஓரத்தில்
ஒதுங்கி நின்றோர் இடத்தில்
மழை கேட்டது :
“நானென்ன
தீண்டத் தகாத பட்டியலில் அடைக்கப்பட்டேனா?
தீட்டான பெண்ணாகப் படைக்கப்பட்டேனா?”

வெளியில் வராமல்
வீட்டுக்குள் பதுங்கிய
மன்னர்குல திலகங்களைப் பார்த்து
மழை கேட்டது :

நீங்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்க
நான் என்ன
அந்நியப் படையெடுப்பா நடத்துகிறேன்?”

இப்படி
வெறுத்தொதுக்கும் மானிடரைக் கண்டு
தற்கொலைக்கு முயன்ற
மழையைப் பார்த்து
மண் சொன்னது :
உலகுக்கே படியளக்கும் நான்
உயிர்அமுதம் சேகரிக்கிறேன்
மழையில் நனையும்போதுதான் !”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT