கவிதைமணி

எனை நனைத்த மழை; லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி
அன்னையின்  பாச மழையில் நனைந்த போதும்தந்தையின் கண்டிப்பு மழை கொதித்த போதும்சுகானுபவத்தை தொட்டேன் ; துளிவிழும் மழையம்  மகானுபவத்தை தருவதில்லை  தானே ?மனைவியின் அணைப்பில் மகிழ்ந்து மக்களின்மழலை மழையைக் கண்டபோது  உடலில்புளகாங்கித முண்டாகி  புரிந்த இன்பத்தின் மேலாம்பொட்டு மழைதான் என்ன செய்திட மு டியும்?கொட்டோ கொட்டென  கொட்டித் தீர்த்தபோது  பட்ட துன்பம் கோடி , பகர்ந்திட வார்த்தையில்லை;வீட்டில் தண்ணீர், வெ ளியில் தண்ணீர், ரோட்டை  மேவிவிழுந்தோடும் வெள்ளம்; நனைத்த மழையோ  கனைத்து சிரித்தது.விதைத்த பயிருக்கு விழும் மேல்மழை இல்லை ; இன்றோவிவசாயி படுவதோ சொல்லி  மாளாத தொல்லை;தரையைநனைத்து வைக்கவும் மழைப்  பொழிவில்லை; நாவைநனைத்து வைக்கவும் நீரின்றிப் போகும் நாளை.நீரை சேமிக்கும்  நிலையில்லை யானால்  இனிமேல்யாரை நொந்தும் பயனின்றிப் போகும் ; மரங்களை நட்டுமாநிலம் காப்போம் ; மழையை வரவழைக்கும்  மரங்களேவானிலை மாற்றி அனைவரையும் நனைக்கும்; காக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT