கவிதைமணி

எனை நனைத்த மழை:  ஸ்டெல்லா தமிழரசி

கவிதைமணி

துவைத்த தாவணியின்
கடைசி சொட்டு நீரை
வைரமாக பத்திரபடுத்துகிறேன்...

*மாங்கு மாங்கென
அம்மியில் அறைந்த
உளுந்தப்பருப்பு துவையலின்
கூடுதல் சுவையே உன் நெற்றிநீரின்
வியர்வை துளிதான்...

*சொட்ட சொட்ட
நனைந்த கருங்கூந்தலோடு
பால்கனி ஓரத்தில்
படக்கென்ன கூந்தலை அடித்துஓடிவரும்
சிறு தூரல் தான் ஜம் ஜம் ஊற்று எனக்கு ...

*நீ
வாசல் தெளித்த
வாளி தண்ணீரெல்லாம் 
புனிதநீர் தான்...

* நீ நீர் தெளித்த சாரலில்
பூப்பெய்தியது 
பருவ காதல்....

*வெட்க மழையில்
நனைத்துவிட்டு போகிறாய்
உன் ஒற்றை புன்னகையில்
எப்படி துவட்டிக்கொள்ள
முடியும் என்னால்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT