கவிதைமணி

அரியாசனம் !  கவிஞர் இரா .இரவி !

கவிதைமணி
உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு 
உருக்குலைந்து வருவது வேதனை !
 
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே 
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
 
அறம் மறந்து  அறிவிலி ஆகின்றான் 
ஆசைப் பிடித்து நாளும்  அலைகிறான்!
 
மனிதன் என்பதை மறந்து துளியும் 
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
 
எப்படியும்  அரியாசனம் அமர்வதே 
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
 
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு 
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
 
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான் 
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான் 

வாக்களித்த மக்களே வெறுக்கும்படி 
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
 
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் 
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
 
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதி! மோடி தமிழில் புகழாரம்!

பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச. 15 முதல் விருப்ப மனு: அதிமுக

சபரிமலையில் குவியும் பக்தர்கள்! தரிசன நேரம் நீட்டிப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு 11-ஆவது முறையும் தோல்விதான் கிடைக்கும்: ஆா்.எஸ்.பாரதி

SCROLL FOR NEXT