கவிதைமணி

நிலாவிடு தூது: - கோ. மன்றவாணன்

கவிதைமணி

புறாவைத் தூது விட்டால்
வலை விரித்துப் 
பிடிப்பார்களோ…

காற்றைத் தூதுவிட்டால்
புறப்பட்ட இடத்துக்கே
திரும்புமோ….

நதியைத் தூதுவிட்டால்
கட்டிவிடுவார்களோ…
கல்அணை 

தோழியைத் தூதுவிட்டால்
அவள் அழகில்
அவன் மயங்கிவிடுவானோ…

வண்டுவைத் தூதுவிட்டால்
வழியில் உள்ள
பூவனத்தில் மதுகுடித்து
போதையில் 
பாதை மாறுமோ….

என ஐயுற்ற எனக்கு
உன்னை அல்லால் யாருமில்லை 
தூது செல்ல!

ஞாபகம் வருதே…
அன்னையின் மடியில் அமர்ந்து
அன்று மல்லிகைப்பூ கொண்டுவரச் சொன்னேன்

இன்று
அல்லலுறும் என்மனதை ஏந்திச்சென்று
அவன்முன் வைத்து
நியாயம் கேட்டுவர
நீ வருவாயா நிலவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT