நிலாவிடு தூது: சீர்காழி .ஆர் .சீதாராமன்
கவிஞனின் முதல் தூது
உயிர் பொருள் நிலா
குழந்தை முதல் சோறு
ஊட்டும் அன்னையின்
அமைதி தூதுவன் நிலா "
அழகு தேவதை வானத்து
கனவுக் கன்னி நிலா
மின்சாரம் இல்லா
இடத்தில் உலா வரும்
இரவு மகாராணி நிலா "
பெளர்ணமியில் நிலா
புது மணப்பெண்
வளர்ந்து தேயும் போது
அவளே கற்க வேண்டிய
முதல் பாடம்
நிலவில் கால் வைத்த
மனிதன் துன்புறுத்தி
விடுவானோ என்ற
ஏக்கப் பெருமூச்சில்
நிலா விட்டதோ
புதுமை தூது ?"
தூது விடும் ரகசியம்
மட்டும் சொல்
நிலாப் பெண்ணே