கவிதைமணி

நிலாவிடு தூது: சு.ஜெயக்குமார்

கவிதைமணி

கவியொருவன் மனவலியில்
கண்ணீரோடு தூதனுப்புகிறேன்
வாக்கினை வஞ்சகனுக்கு விற்றுவிட்டு
வாழ்க்கையை வாங்க இயலாது
வயல்வெளியெல்லாம்  அழித்துவிட்டால்
வாய்க்கரிசி வெளிநாட்டில் கிடைக்காது 
குடியில் நாளெல்லாம் கழித்துவிட்டவன்
குடி உயர வழியேது
வீதியில் பெற்றோரைத் தவிக்கவிட்டு
கோவில்கள் சென்றாலும் புண்ணியமேது 
ஊழல் பெருச்சாளியாய் உலாவந்து
கலிகாலமிதுவென்றால் பொருளேது
அநீதியை கட்டவிழ்த்து ரசித்துவிட்டு
மழை வேண்டினால் பயனேது
பணமும் பதவியுமே குறிக்கோளாயின்
வாழ்வில் நிம்மதி காண்பதேது
தன் மதி கேளா மானிடனுக்கு 
வான்மதியே நீ இதை சொல்லாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT