கவிதைமணி

புதிய டைரி;  இளவல் ஹரிஹரன்

கவிதைமணி
ஒவ்வோராண் டுத் தொடங்கும் போதே நெஞ்சில்     உறுதிகள்வ ரிசையாகத் தோன்றும் யாவும்செவ்வனேநி றைவேற்ற வேண்டும் என்ற   சிந்தனையே எழும்,ஆயின் செய்தோ மாஇச்செவ்வியநற் கேள்வியினைக் கேட்டுக் கொண்டால்    செயலதனில் தடுமாறித் திசைகள் மாறிவெவ்வேறாய்ப்பயணித்துச் சென்றி ருப்போம்,    வெறுந்தேதி கிழித்தபடிக் கழித்தி ருப்போம்.புதியடைரி எழுதவேண்டும் எனுமா சையில்     பிள்ளையார்ச் சுழிபோட்டு வைத்தி ருப்போம்.பதிவதனை உள்ளபடி எழுத லாமோ     படித்ததனைப் படித்தபடி பகிர லாமோஉதித்ததெலாம் உதித்தபடி உரைக்க லாமோ    ஒவ்வொன்றாய் நிகழ்வுகளைச் சேர்க்க லாமோமுதிர்ச்சியுள்ள அறிவதனை மொத்த மாக    முகவுரையாய் எழுதிவர முடிய லாமோஎன்றெல்லாம் எண்ணியந்த எண்ண மெல்லாம்    எடுத்தியம்ப நினைத்தாலே எங்கி ருந்தோதன்னாலே பொல்லாப்பு சூழு மென்ற    தவிப்பாலே அன்பளிப்பாய்க் கிடைத்த டைரிமுன்பக்கந் தொடங்கிமெல்ல முடிய மட்டும்    முழுவதுமாய் ஒன்றுகூட எழுத வில்லைஎன்செய்ய என்னுளம்போல் வெள்ளை யாக    இருந்ததையோ புதியடைரி எப்போ தும்போல்!         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT