கவிதைமணி

நீதியைத் தேடி:   கவிஞர் மா.உலகநாதன்,

கவிதைமணி

எங்கே தேடுவேன்,நீதியை
எங்கே தேடுவேன்;
வாடி வாசலிலா,கடற்கரை 
மணலிலா?
காணாமல் போன ஒன்றைக்
கடுகியே தேடச் செய்கிறீர்!
மனத்துக்கண் மாசு அமர்ந்ததுமே
இனத்துக்கண் நீதி இற்றுப் போகுமே!
மனுச்சோழன் ஆண்ட மண்ணில்,மாய்மாலக்காரர்களால் நீதி மாண்டு போய் நெடுங்காலம் ஆனதே!
நீதிபோதனை, பாடவகுப்பிலிருந்தும்
மனத்தேடல் தொகுப்பிலிருந்தும்
மறைந்து போனதே!
இதில்
எங்கே தேடுவேன்,நீதியை எங்கே தேடுவேன்;
தனியொரு மனிதன்  நீதிமான் என்றால்
சமுதாயமும் கவரிமான் ஆகாதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

SCROLL FOR NEXT