கவிதைமணி

நீதியைத் தேடி: கே.நடராஜன்

கவிதைமணி

ஒரு நதியின் நீருக்காக நீதி  தேடி ஓடிய எங்கள் 
ஓட்டம் ஒயவில்லயே இன்னும் ! மீண்டும் ஒரு 
ஓட்டம் ..நாங்கள் ஓடுகிறோம் உன்னைத் 

தேடி நீதி தேவதையே ! இந்த ஓட்டம் 
எங்கள் நாட்டு மாட்டின் ஓட்டத்தைத்  
தடுக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் 

கொட்டம் அடக்க !...ஒரே குரலில் 
கேட்கிறோம் ஒன்றே ஒன்று மட்டும் 
உன்னிடம் நீதி தேவதையே !

இழைக்கப்பட்ட அநீதி அழிக்கப்பட்டால் 
கிட்டும் ஒரு சரியான நீதி எங்களுக்கு "

நீதி தேடி மீண்டும் உன் கதவு தட்டும் 
காலம் இனி வேண்டவே வேண்டாம் 
எங்களுக்கு நீதி தேவதையே !

நம்புகிறோம் நாங்கள் உன்னை !
 வெல்வது நீயாக இருக்கட்டும் ..உன் 
வெற்றியில் தழைத்து செழிப்பது எங்கள் 
நாட்டுக் காளை இனமாகட்டும் ! எங்கள் 

ஆவினம் குலம் தழைக்க நீ பெறும் வெற்றி 
எங்கள் தமிழ் தாய்  உள்ளம் குளிரும் வெற்றி ! 

நீதி தேடி நாங்கள் ஓடியது   போதும் ! நியாயம் 
இருக்கும் இடம் தேடி நீ ஓடி வா நீதி தேவதையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT