கவிதைமணி

சட்டம் : கே.நடராஜன்

கவிதைமணி

திட்டம் போட்டு தீட்டும் சட்டம் சுற்றும் 
ஒரு வட்டத்துக்குள் !  வட்டத்தை 
தாண்டி கால் வைக்காதவரை 
சட்டம் தண்டிக்காது !  இது 
சட்டத்தின் நீதி ! சட்டத்துக்காக 
பட்டம் எதுவும் பெறாத ஒரே 
சட்டம் ஒருவரின் மனசாட்சி !
மனசாட்சியின்  அரசாட்சி ஒரு 
வட்டத்தில் சுற்றாது ! எது நியாயம் 
எது தர்மம் என குரல் கொடுப்பது 
மனசாட்சி மட்டுமே ! தம்பி நீ 
இப்போது சொல்லு ... சட்டம் சொல்லும் 
நீதிக்கு தலை வணங்கினால் மட்டும் 
போதுமா ... இல்லை .. உன் மனசாட்சியின் 
குரல் சொல்லும் நியாயம்  தர்மத்தின் வழி 
நீ நடக்க வேண்டுமா  வேண்டாமா ? 
மனிதன் போடும் சட்டம்  நம் மனசாட்சியின் 
முன்னே  ஒரு காகிதப் பட்டம் ! 
நீதியை மீறவேண்டாம் நீ ... அதே சமயம்  
மறக்கவும் வேண்டாம் நீ எது நியாயம் 
எது தர்மம் என்று  உன் வாழ்க்கையில் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT