தொண்டுக்கென்றே புறப்பட்டு
துண்டு போட்டு இடம் பிடிக்கும்
தறுதலைகளிடமிருந்து
எப்போது விடுதலை ?
நாளொரு பொழுதாய் மீளாத
தொடர்கதையாய்ப்போன மீனவர் வாழ்வில்
விடுதலை எப்போது?
சல்லிக்கட்டு,மீத்தேன்,கெயில்,ஹைட்ரோ கார்பன் என
சீண்டிப்பார்க்கும்
சிறுமதியாளர்களிடமிருந்து
எப்போது விடுதலை?
ஒருவேளை,
காமராசரும் பேரறிஞரும்,
மீள வரும்வேளை தான்
சாத்தியமோ?இது சத்தியமோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.