கவிதைமணி

 விடுதலை: -ரெத்தின.ஆத்மநாதன்,

கவிதைமணி
கொடிய விலங்குகளைக்
கூண்டைவிட்டு வெளியே விட்டால்
கொண்டாடி அவையுந்தான்
கூடித்திரியும் சுதந்திரமாய்!
நாட்டுமக்கள் விடுதலையோ
நல்லாட்சி நல வாழ்வில்!
பாட்டுப்பாடி வாழ்ந்த காலம் 
பரிணமிக்குமா இனியுந்தான்!
ஆட்சிசெய்ய வருவோரெல்லாம்
அப்பழுக்    கற்றவராய்
வாழ்ந்த    காலமின்று
வரலாறாகிப்  போனதையோ!
குற்றவாளி     இவரென்று 
உச்சநீதி   மன்றமே
உறுதியாய்ச் சொன்ன பின்பும்
வேறென்ன வேண்டுமிங்கு?!
மாண்புமிகு    என்றாலே
மதிப்புமிகு    என்பதுபோய்
கேடான வார்த்தையாய் அது
கீழாகிப்  போனதையோ!?
பணத்துக்காய்  கூவத்தூரில்
பரதேசிகளாய்  வாழ்ந்தவர்கள்
பண்புள்ள        இம்மண்ணில்
படுக்கவும்     தகுதியற்றவர்கள்!
நாலரை   ஆண்டுகள்
நல் மண்ணை இவராண்டால்
மீத்தேன்    கார்பனெல்லாம்
மேலெழும்பி   நாடழியும்!
வேண்டாம்    இவராட்சி
வேதங்களும்  தாங்காது!
மொத்தமாய்  இவரொழிந்தால்
முகிழ்க்கும் விடுதலை தமிழகத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT