கவிதைமணி

வீர மங்கை: பூ. சுப்ரமணியன்

கவிதைமணி

பெண்ணே 
வீட்டிலே நீ
அடைந்து கிடக்கும்
கூண்டுக் கிளியல்ல
நாட்டையே ஆளும்
வீர மங்கை நீ  !

நீ நிற்கும்
நெடுமரம் அல்ல
நீரில் மிதக்கும் மரக்கலம் !
அனைவருக்கும்
அடைக்கலம் தரும்
மனிதநேய வீர மங்கை!  

நீ
அலங்காரப் பதுமையல்ல
அணி வகுத்து
நாட்டைக் காக்கும் 
நிற்கும் வீர மங்கை !

நீ
பயனில்லாக்
காட்டுப் பூ அல்ல
மக்கள் விரும்பும்
மங்கையர் மலர்  !
 

நீ
பாலியல் தொந்தரவு
கண்டும் கேட்டும்
பதுங்கும் பூனையல்ல
பாயும் பெண் புலி !

நீ
நுகர்ந்து எறியும்
மலரல்ல
என்றும் எப்போதும்
அனைவரும் விரும்பும்
வீரம் மணக்கும்
சந்தன மலர்கள் !

நீ
வன்கொடுமை
கண்டும் கேட்டும்
வளைந்து செல்லும்
நதியல்ல
ஆர்பரிக்கும் கடல் !

நீ
பெண் உரிமைக்காக
மண்டியிடாமல்
வீரத்துடன் போராடி
உயிர் விடும்
கவரி மான் !

நீ
வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்
காட்டு விலங்கல்ல
இல்லத்தில் என்றும்
தீப ஒளி வீசும்
குத்து விளக்கு !

நீ
நீரோட்டம் அல்ல
மனித உள்ளங்களை
உணர்ந்து செல்லும்
உயிரோட்ட மங்கை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT