கவிதைமணி

நிழல் தேடி:   பூ. சுப்ரமணியன்,

கவிதைமணி

நிழல் 
நின்று ஆடிப்பாடி
அடுக்குமொழியில்  
பேசியதையெல்லாம் 
நிஜம் என்று எண்ணி 
தமிழக பாமர மக்கள்
தங்கள் ஓட்டுக்களை
துட்டுக்கு 
வாரி வழங்கி விட்டு 
வாழ வழியில்லாமல்
நிஜத்தைத் தேடாமல் 
நிழலைத் தேடி தேடி 
அலைகிறார்கள் !

நாம் காலையில்
நிழலைத் தேடினால் 
நிழல் நம் முன்னே
வந்து வணங்குகிறது !

தேர்தலின்போது 
நம்மையெல்லாம் 
அரசியல்வாதிகள்
வணங்குவதைப் போல. 

நாம் பிற்பகலில் 
நிழலைத் தேடினால் 
நிழல் நிற்காமல் நம்  
பின்னே தொடர்கிறது !

தேர்தல் நாளன்று
தம்மோட ஓட்டுக்காக. 
நம் பின்னே வரும்
அரசியல்வாதிகள் போல. 

நாம் இரவில் ...
நிழலைத் தேடினால் 
நிழல் இருக்கும் இடம்
தெரியாமல் 
மறைந்து விடுகிறது !

வெற்றி பெற்ற பிறகு
தொகுதிப் பக்கமே 
தலைகாட்டாத  
அரசியல்வாதிகள் போல !                                       
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT