கவிதைமணி

 நிழல் தேடி: -உத்ரன்

கவிதைமணி

அன்பே உந்தன் நிழல்தேடி
ஆன்மாவை நான் வளர்க்கின்றேன்!
கோடிப் பெண்கள் பூவுலகில்
கொஞ்சும் அழகுடன் திரிந்தாலும்
பாடி அவர்கள் பறந்து மகிழ்ந்து
பஞ்சுப் பொதியாய் அலைந்தாலும்
நெஞ்சம் நிறைப்பவள் நீதானே!
நினைவில் நிற்பவள் நீதானே!
கஞ்சத் தனமாய் நான் என்றும்
கனவில் நிறுத்துவேன் உனைத்தானே!
வேண்டாம் எனக்கு ரதி ரம்பை
வேண்டும் உந்தன் நிழல்தானே!

ஒளிரும் மதியில் உன்முகத்தை
ஒட்டி வைத்ததும் எப்படியோ?!
மிளிரும் வானின் மேகங்களில்
மிளிர்வது உந்தன் ஆடைகளோ?!
பெய்யும் மழையில் உன் வதனம்
பெருமையாய்த் தெரிவது எங்ஙனமோ?!
காலைக் கதிரில் உன் உருவை
கண்கள் காண்பது நிஜந்தானே!
மாலைக் கதிரவன் மலைமுகட்டில்
மறைவதும் உன்னிடம் தோற்றுதானோ!
ஏழை எனக்கு உன்நிழலை
எப்பொழுது நீ தருவாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT