கவிதைமணி

 நிழல் தேடி: சீர்காழி .ஆர் .சீதாராமன்

கவிதைமணி

சுட்டெரிக்கும் வெயிலில்
விளையாடிய சிறுவர்கள்
இளைப்பாற  நிழல் தேடி
நகர்ந்தனர் "

வயது முதிர்ந்த   
பெற்றோர்கள் பிள்ளைகளின்
நிழல்தேடி தஞ்சம்
புகுந்தனர்

வெளிநாட்டுப் பறவை
முதல் நெடுந்தூர
பயணம் வந்த பறவைகள்
வரை நிழல் தேடி      
புகுந்தது மரக்கிளையில்

வறண்ட பூமியில்
கண்ணீரோடு தாகம் தீர
விவசாயி நிழலை தேடி
முன்னேறினான்

நட்சத்திர குழந்தைகள் 
தாய் நிலாவின் நிழல்தேடி
சுற்றி நின்று வட்டம்
அடித்தது தானும்
ஜொலித்து விட 

தாரம் தாய் என்று
பெண்களின் உழைப்பு
சேவை தேவை
நிழல் தேடி ஆண்கள்
கூட்டம்

பயணிகளும் வீட்டு
விலங்குகளும் சாலை
ஓரத்தில் நிழல் தேடி
ஓய்வுக்காக பயணம்
  
அசையும் உயிர்கள்
எல்லாம் நிழலைத்
தேடியே பயணம்
செய்வது மட்டும்
நிதர்சன உண்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT