கவிதைமணி

ஆறோடும் - நீரோடும்: ஆனந்த் சுப்ரமணியம்

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
வயல் பரப்பெங்கும்
சீராய்ப் பாய்ந்தோடும்
எங்கள் ஊரெங்கும்

விதை மண்ணுக்கு
உயிர் சேர்க்கும்
வயல் பரப்பிற்கு
பலம் சேர்க்கும்

கிராமத்தின்
அழகு மிளிரும்
நம் குடி நீரின்
தாகம் தணியும்

வாய்க்கால்கள்
பல இருக்கும்
நம் தேவைகளும்
அதில் அடங்கும்

பறவைகளும்
படையெடுக்கும்
நீர் அருந்தி
மனமகிழும்

மீன்களும் துள்ளி
விளையாடும்
நம் பார்வைக்கு
பரவசமாகும்

ஆற்றில் குளிப்போர்க்கு
உடல் ஆரோக்கியம்
சீராகும்
மனம் புத்துணர்ச்சி
பெற்றுவிடும்

ஆற்றங்கரையோரம்
அந்திசாயும் பொழுதோடும்
சலனமின்றி ஓடிடுமே
ஆறோடும் நீரோடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT