கவிதைமணி

ஆறோடும் நீரோடும்; -வேம்பார் மு.க.இப்ராஹிம்

கவிதைமணி

ஆறோடும் நீரோடும் இடந்தான் 
நாகரிகத்திடன்  உறைவிடம்
அதுதான்
மனிதயினத்தின் பிறப்பிடம்..

உண்டான் உறங்கினான்
உயிர் வாழவும் கற்றுக்கொண்டான்
தாயைப் பழித்தாலும்
தண்ணீரைப் பழிக்க அஞ்சினான்..

கரை யில் மோதும் அலையைப் பார்த்து
கவலையை அதில் மறந்தான்..
கையில் நீரெடுத்து கன்னத்தில் அதைத் தெளித்து
காதலியுடன் களிப்புற்றான்..

ஆர்ப்பரித்து ஓடிய ஆறுகள்
அணைகளால் முட்டி முடங்கிப் போனது..
சிமெண்ட் கலவைகளில் சிக்கிப்போனது..

ஆறு இங்கே அரசியலாய் ஆனது
அள்ளிய மணலும் நீரும்
பணமாய் மாறியது..
நீருக்கான நிஜ யுத்தம்
மூளும் நாளும் தொலைவில் இல்லை..
இதை உணரும் நிலையில்
நாமும் இல்லை..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT