கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

மண்ணில் தாவி குதித்தோடும் 
மங்கையென வெட்கம் கொண்டே 
மயங்கி ஓடிவரும் ஆறே  !

இருக்க நிலையில்லா நீரிது
நிலத்தில் ஓரிடம் நில்லாது 
காடு மேடு அலையும் ஆறே  !

நீ சொல்லித்தரும் பாடம் 
நில்லாத தொடர் ஓட்டமதுவே ! 
இயங்கிக்கொண்டே இருக்கும் ஆறே  !

கடலில் கலக்காது அணையில் தேங்கி 
மக்களுக்கு உணவாகிறாய் - நன்றிகள் !
மழை உன் தாய் என்றால் 
சுற்றுப்புற மாசுபாடுகள் - 
மனித செயல்பாடுகள் காயங்களாய்  !

நீரின் பாதையில் கட்டிடங்கள் !
அதனாலே வெள்ளமாகிறாய்!
உன் தாயின் வருகைக்குக் காத்திருக்கும் 
கோடி உள்ளங்கள்- அழைத்து வா ஆறே  !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT