கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: கோ. மன்றவாணன்

கவிதைமணி

ஒவ்வொரு நூற்றாண்டும்
ஒருசில ஆறுகளைக்
காவு வாங்கிக்
கடந்து போகின்றது

இதே நூற்றாண்டில் ஓடிய
எங்களூர் ஓடையைக்
காணவில்லை
அது
எம்எல்ஏ வீட்டுக் கருவூலத்தில்
பணக்கட்டுகளாக மாறிப் 
பதுங்கிக் கிடக்கிறதாம்.

அன்று
நாகரிகங்கள் வளர்ந்ததெல்லாம்
நதிக்கரையில்தான்

இன்று
நாகரிக வளர்ச்சியில்
நதிகள் கரைந்துபோய்விட்டன

நம் தாத்தா இறந்தபோது
நதிக்கரையில் காரியம் செய்தோம்
நாம் இறக்கும் முன்னமே
நதிக்கே காரியம் செய்கிறோம்

தீர்த்தவாரிக்குச்
சாமிகளை வரவழைத்துத்
திருப்பி அனுப்புகிறார்கள் ஏமாற்றி

நதிநடந்த பாதையைத் தேடி
நாளை அகழ்வாராய்ச்சி
நடத்திக்
கான்கிரீட் குப்பைகளை
அள்ளலாம்

ஆறோடுவதையும்
நீரோடுவதையும் 
காணக் கரிகாலன் காலத்தை 
உயிர்ப்பித்துக்கொடு சாமி..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT