கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: பொன். குமார்

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
ஆனந்தமாக வாழ்ந்தவர்கள்
மக்கள்.

கிணறு வெட்டியும்
குளம் அமைத்தும்
குதித்து குளித்து
கொண்டாடியவர்கள்
மக்கள்.

ஆறுகளை
அழித்து விட்டார்கள்.
நதிகளை
நாசப்படுத்தி விட்டார்கள்.
கிணறுகளைக்
கொன்று விட்டார்கள்.
குளங்களைக் 
காணாமல் செய்து விட்டார்கள்.
மிச்சம் இருக்கும் நீரையும்
மாற்றானுக்கு விற்று விட்டது
அரசு.

இன்று
குளிக்கவும் நீரில்லை.
குடிக்கவும் வழியில்லை.
ஆறோடும் நீரோடும்
வாழ்ந்தவர்கள்
கண்ணீரோடும் வியர்வையோடும்
வாழ்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT