கவிதைமணி

ஆறோடும் நீரோடும்;ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

வறண்ட மேகத்தையும்
மழையாய் அழ வைக்கும்
மந்திர சக்தி மரம்
பச்சை மரத்தை வெட்டாதே
பட்டமரத்தை வெட்டலாம் நீ
அருகில் ஒரு செடி நட்டால்
இப்படி நீ செய்தால்
இடைவிடாது மழை பெய்யும்.

மரத்தால் பெய்த மழையை
ஒரு சொட்டும் வீணாக்காது
ஏரி குளம் குட்டையென
எல்லாவற்றிலும் நீ தேக்கு
தேக்கும் நீரில் ஒரு பாதி
நிலத்தடி நீராகி உயருமே நீர்மட்டம்
மறுபாதி ஆவியாகி பெய்யுமே மழையாக...

மரத்தால் ஒரு மழை
தேக்கும் நீரால் மறுமழை
இருமழையின் நீர் தேங்கி
பெய்யுமே மூன்றாம் மழை
மாதம் மும்மாரி பெய்தால்
ஆறோடும் வழியெங்கும்
நீரோடும் வெள்ளமாக
நம் மனம் துள்ளுமே மகிழ்ச்சியாலே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT